|
கருணா இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டாரா? இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை |
|
|
|
Thursday, 08 May 2008 |
கருணா பிரித்தாணியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது எனினும் பிரித்தாணிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் இன்னும் அவர் தடுப்பு காவலிலேயே வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கடவுச்சீட்டை கொண்டு பிரித்தாணியாவுக்குள் பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2007 ஆம் நவம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட கருணா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் இருந்து மாற்று இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அவர் தமக்கு சட்டவிரோதமான கடவுச்சீட்டை இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவே வழங்கினார் என பிரித்தாணிய நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.
நெருடல் இணையம்
|