பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அம்பாறையில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 30 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 08 May 2008

அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து நிலையத்திற்கு அண்மித்து உள்ள பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவர், முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இருப்பினும் "சிற்றி கபே" என்ற தேநீர் விடுதிக்குள்ளேயே குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொதியில் வைக்கப்பட்ட நிலையில் குண்டு வெடித்ததாகவும் அம்பாறையிலிருந்து கிடைக்கும் பின்னைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 30 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை தேசிய மருத்துவமனையின் இயக்குநர் லங்காதிலக்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் இதனை மறுத்துள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..