பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 May 2008

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் அரசாங்கம் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை விரைவில் வெளிப்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்விக்காணப்போகிறது என்பது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டிய ஆய்வு தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அம்பாறையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது பல மோசடிகளும் மேற்கொள்ளப்பட்டன.

திருகோணலையில் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பாரிய வாக்கு மோசடிகளில் ஈடுபட்டது. அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சில அமைச்சர்கள் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அரசாங்கமும் பிள்ளையான் அணியும் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் வெற்றிப்பெற்றது என நிரூபிக்கப்போகிறோம் என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகளை எதிர்த்து சட்டநடவடிக்கைகளுக்கு யோசித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் அணிய்pன் 14 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டது. எனினும் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

திருக்கோவில் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களில் சுமார் 91 வாக்குசாவடிகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு நிலைய முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த தமது முறைப்பாடுகளை வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்கள் பதிவு செய்யவில்லை எனக்குறிப்பிட்ட ஐக்கிய தேசியக்கட்சிய்pன் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல இதன் காரணமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..