|
அதாவுல்லாவும் அவரது குழுவினரும் கல்முனையில் நையப்புடைக்கப்பட்டனர். |
|
|
|
Sunday, 11 May 2008 |
|
கல்முனையில் இன்று அதாவுல்லாவும் அவரது குழுவினரும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நின்று வெற்றி பெற்ற அதாவுல்லா. இன்று மாலை 7மணியளவில் நிந்தவ10ரிலிருந்து தனது படை பரிவாரங்களுடன் ஊர்வலமாக ஆரவாரத்துடன் வந்திருக்கிறார். சுமார் 300ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிந்தவூர் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய ஊர்கள் வழியாக வரும் போதெல்லாம் இப்பிரதேச முஸ்லிப் பெண்களை மிககேவலமாக திட்டியும், முஸ்லிம் காங்கிரஸை தகாதவார்த்தைகளால் திட்டியும் வந்திருக்கின்றார். மருதமுனைக்கு வந்து பின்னர் திரும்பி போகும் வழியில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன்னால் பொல்லுகள் கட்டைகள் சகிதம் காத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டனர்.
அங்கு இரு குழவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அதாவுல்லாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் சுமார் 30 பேர் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
இதன்போது பொலிஸார் வானை நோக்கித் தப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் அதாவுல்லாவை பத்திரமாக கூட்டிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காயங்களுக்குள்ளான அதாவுல்லா அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் இன்னுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
மீனகன
|