|
முதலமைச்சர் பதவி எனக்குத்தான் என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் - ஹிஸ்புல்லா |
|
|
|
Monday, 12 May 2008 |
|
முதலமைச்சர் பதவியை எனக்குத் தருவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு அடிப்படையிலும், நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற முஸ்லிங்கள் பெற்றிருப்பதாலும் எனக்கே முதலமைச்சர் பதவி தரப்படவேண்டும்.
கிழக்கில் 8 முஸ்லிங்கள் ஆசனங்களைப் பெற்றிருப்பதல் முதலமைச்சர் பதவி எனக்கே. வேறு எந்தக் கேள்விக்கும் இங்கு இடமில்லை. 6 ஆசனங்களைப் பெற்ற பிள்ளையானுக்கு எந்த உரிமையும் இங்கு கிடையாது. உரிமையும் கோரமுடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|