|
மணலாற்றில் 60 மில்லியன் ரூபாவில் 600 வீடுகளுக்கு பதுங்குழிகள் அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு |
|
|
|
Thursday, 15 May 2008 |
|
மணலாற்றில் 60 மில்லியன் ரூபா செலவில் பதுங்கு குழிகளை அமைக்கும் திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. மணலாறு ஜனகபுர, எதாவெட்டுனுவெல, ஆகிய எல்லைப்புற சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலேயே இப் பதுங்கு குழி அமைக்கும் திட்டம் முன்னேடுக்கப்படவுள்ளது.
60 மில்லியன் ரூபாவில் 600 வீடுகளுக்கு முதலில் பதுங்கு குழிகளை அமைப்பது என சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாடசாலைகள், அரச செலயலங்கள், பொது இடங்கள் என அனைத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்படவுள்ளன. இதனை சிறீலங்கா தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நெருடல் இணையம்
|