பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

வன்னிப்போரின் செல்நெறி கண்டு குழம்பிப்போயுள்ள சிங்கள ஆட்சியாளர்கள்: "விடுதலைப் புலிகள்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 15 May 2008

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (09.05.08) வெளிவந்த "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது இதழின் முகப்புச் செய்தி: 

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழர் சேனைக்கும்- சிங்களப் படைக்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சையில் புலிகளின் கை மேலோங்கத் தொடங்கிவிட்டது என்று இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்கூறத் தொடங்கிவிட்டனர்.

புலிகளின் பலம்- பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து புலிகளைத் தோற்கடிக்கக்கூடிய இராணுவத் திட்டம் ஒன்றைத் தாம் வெற்றிகரமாக வரைந்து விட்டதாகவே சிங்களத் தரப்பு நினைத்திருந்தது. அந்த நம்பிக்கையிலேயே வன்னிப்போரின் முடிவு தொடர்பாக காலக்கெடுக்களையும் பகிரங்கமாக அறிவித்து படை செருக்கடைந்திருந்தது.

"ஜெயசிக்குறு" படை நடவடிக்கை தோல்வியில் முடிந்ததற்கான காரணிகளை ஆராய்ந்து அதிலிருந்து பாடங்கள் படித்த நிலையில் ஒரு புதிய படைநகர்வு வியூகத்தைச் சிங்களப் படைத் தலைமை கண்டுபிடித்திருந்தது.

பெரும் எண்ணிக்கையான படையினரையும்- பிரமாண்டமான சூட்டுவலுவையும்- வரையறுக்கப்பட்ட குறுகிய களமுனையில் பயன்படுத்தி - எதிர்ப்படும் அனைத்தையும் அழித்தொழித்துக்கொண்டு செல்லும் புல்டோசர் நகர்வுத் திட்டத்தை ஜெயசிக்குறு நடவடிக்கையில் படையினர் பயன்படுத்தியிருந்தனர். விரைவான நில ஆக்கிரமிப்புத்தான் இந்தப் போர்த்திட்டத்தின் நோக்கம். ஆயினும், அந்த நெருப்பு மழைக்குள்ளும் நின்றுபிடித்து வீரம் காட்டி- வியூகம் வகுத்து ஜெயசிக்குறு பூதத்தைப் புலிகள் கொன்று- வென்றனர்.

பெயர் சூட்டப்படாது படையினர் செய்யும் தற்போதைய வன்னிப் படையெடுப்பில் இன்னொரு வகையான படையெடுப்புத் தந்திரத்தைப் படையினர் கைக்கொள்கின்றனர்.

பரந்த முன்னரங்கில் போர் அரங்கைத் திறந்து சிறிய சிறிய குழுக்களாகப் படையினரைப் பிரித்து- நாள்தோறும் சிறுசிறு சண்டைகளை அங்கெல்லாம் நடாத்தி- மெதுமெதுவாக நிலம் விழுங்கப் படையினர் முனைகின்றனர். இந்தச் சண்டைத் தந்திரத்தின் பிரதான நோக்கம் இயன்றளவு புலிகளைக் கொல்வது தான்.

கடந்த ஒன்றரை வருடகால மாக வன்னிப் போரரங்கின் மேற்கு (மன்னார்) மற்றும் கிழக்கு (மணலாறு) முனைகளில் இவ்வாறான தொரு படைநகர்வுத் திட்டத்தையே பெரும்பாலும், அவர்கள் கைக்கொள்கின்றனர்.

ஆனால், எதிர்ச் சமர்புரிந்து வீரச்சாவடையும் புலிகளை விட மிக அதிகளவில் படையினர் கொல்லப்படுகின்றனர். நில ஆக்கிரமிப்பிலும் வெற்றிபெற முடியாமல் அதேவேளை பெருமளவு படையினரையும் இழந்து படைத்தரப்பு முடங்கிப் போயுள்ளது.

கடந்த ஏப்ரல் 13. வடபோரரங்கில் ஒரு பாரிய வலிந்த தாக்குதலைச் சிங்களப் படைகள் செய்தன. வன்னிப் போரரங்கில் தற்போது சிங்களப்படை பயன்படுத்தும் சண்டை முறையில் விரக்தியடைந்தே இந்தப் பழைய பாணிப் பெருந் தாக்குதலை அவை நடாத்தின. அதுவும் படுதோல்வி கண்டுவிட்டது.

பழைய தந்திரமும் பலிக்கவில்லை. புதிய வியூகங்களும் எடுபடவில்லை என்ற விரக்தி நிலையில் சிங்களப் படைத்தலைமை உள்ளது. இந்த விரக்தியின் வெளிப்பாடாகச் சிங்களத் தளபதிகளுக்குள் கருத்து மோதல்களும்  எழுந்துள்ளன.

இந்த இராணுவச் சூழலிலேயே, தனது பழைய புல்டோசர் திட்டத்தை வடபோரரங் கில் நடைமுறைப்படுத்த முயன்று அதிலும் படுதோல்வி கண்டுள்ளது.

நிலத்தை ஆக்கிரமி- புலிகள் அழிவார்கள் என்றொரு இராணுவச் சித்தாந்தத்தைப் படைத் தரப்பு ஜெயசிக்குறு காலத்தில் வைத்திருந்தது.

புலிகளை அழி- நிலம் கைவசமாகும் என்றொரு புதிய இராணுவச் சித்தாந்தத்தைப் படைத்தரப்பு இப்போது கையிலெடுத்துள்ளது.

படையினரின் இந்தப் போர்த்திட்டங்களுக்கும்- இராணுவக் கோசங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாற்றுத் திட்டங்களையும் புதிய - புதிய முறியடிப்பு வியூகங்களையும் வரைந்து சிங்களப் படைக்குப் பதிலடி கொடுத்து வருகின்றார்.

சிங்களப் படைத்தரப்பின் திட்டங்கள் மெதுமெதுவாகப் புலி வீரர்களால் முடக்கப்பட்டு வருவதால் வன்னிப் போரரங்கம் காட்சி மாற்றம் கண்டுவருகின்றது.

திட்டங்கள் தவிடுபொடியாகியதால் சிங்களப்படை உளவுரன் சிதைந்து திணறுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் போரியல் திறனை வெளிப்படுத்தி இராணுவச் சாதனைகள் புரியும் புலிகள் இயக்கத்தின் பல வெளிப்பாடு தமிழ் மக்களுக்கு உற்சாகத்தையும்-மகிழ்ச்சியையும் வழங்கி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..