|
பிள்ளையானின் தெரிவு கிழக்கு மாகாணசபைக்கான அரசியலமைப்பு சட்டமூலத்தை மீறியுள்ளது - சி.மு.கா |
|
|
|
Sunday, 18 May 2008 |
|
ஆயுததாரி பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கம் கிழக்கு மாகாணசபைக்கான அரசியலமைப்பு சட்டமூலத்தை மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியமையானது எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அவமதிக்கும் செயல் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருப்பதானது ஆச்சரியத்திற்குரிய விடயம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|