|
பெசில் ராஜபக்ஸவின் மகள் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வருவதற்கு விசேட ஹெலிகொப்டர் |
|
|
|
Sunday, 18 May 2008 |
|
ஜனாதிபதியின் சகோதரரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெசில் ராஜபக்ஸவின் புதல்வி கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்கு விசேட ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (மே17) காலை 8.05 அளவில் சிங்கப்பூரிலிருந்து பெசில் ராஜபக்ஸவின் புதல்வி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாகத் தெரியவருகிறது.
அவரை வரவேற்பதற்கு பெசில் ராஜபக்ஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் கட்டுநாயக்க சென்றிருந்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக விமான நிலையமொன்றில் மேற்கொள்ளப்படும் எவ்வித சட்டவிதிகளும் பின்பற்றப்படாது பெசில் ராஜபக்ஸவின் புதல்வி நேரடியாக ஹெலிகொப்டருக்கு ஏற்றப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|