பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் மூதூரில் மீன்பிடித் தடை அமுல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 May 2008

மாகாணசபைத் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் மூதூர் கடற்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான தடை தளர்த்தப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே மீண்டும் அந்த கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தடை அமுலுக்குவந்துள்ளதாக மூதூர் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 11ஆம் திகதி முதல் தாம் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலிடத்திலிருந்து தமக்குக் கிடைத்த உத்தரவிற்கமைய மீன்பிடிக்கச் செல்வதற்கான அனுமதியினை வழங்கமுடியாதுள்ளது என கடற்படை அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதன் காரணமாக சுமார் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, மூதூர் பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு எந்தவித தடைகளும் இல்லை எனவும், ஆனால் துறைமுகப் பகுதிகளுக்கே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..