|
Tuesday, 20 May 2008 |
|
யாழ் தீவகம் மண்டைதீவுப் பகுதயில் சிறிலங்காப்படையினர் கடந்த 17 ஆம் திகதி மாலையில் இருந்து நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பதுதொடர்பாகவே இப்போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.
இப் போர் ஒத்திகை நடவடிக்கையின்போது கடற்படை நீரூந்துவிசைப்படகுகள், உலங்குவானூர்திகள் என்பன பறப்பில் ஈடுபட்டுள்ளது.
இப்போர் ஒத்திகையை அடுத்து யாழிலிருந்து தீவகம் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதையான பண்ணை வீதி பிற்பகல் 3.00 மணியிலிருந்துந்து நேற்று முன்தினம் வரை பயணிகள் பயணிப்பதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|