பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

முஸ்லிம் வர்த்தகர்களை ஓட ஓட விரட்டித் தாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 27 May 2008

மட்டக்களப்பில் வியாழன் 22 05 08 அன்று  பிள்ளையான் குழுவினருக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட பதற்றமான சு10ழ்நிலையைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் குழுவினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.  இது பற்றி மேலும் தெரியவருவதாவது

வியாழன் மாலை 2 மணியளவில் மட்டக்களப்பு நகரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களுக்குட்புகுந்த பிள்ளையான் குழுவினர் அங்கிருந்த முஸ்லிம் வர்த்தகர்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளதுடன் அவர்களை ஓட ஓட வீதிகளில் விரட்டிச் சென்றும் தாக்கியுள்ளனர். கொட்டன்களாலும், தடிகளாலும் மற்றும் பைப்புக்களாலும் மிகமோசமான தாக்குதல்களுக்குள்ளான முஸ்லிம் வர்த்தகர்கள் அல்லா..அல்லா என்று கத்தியவாறு நகர மத்தியிலுள்ள பள்ளிவாசலை நோக்கி ஒடிச்சென்றதை காணக்கூடியதாகவிருந்தது.

பிள்ளையான் குழுவினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் தமிழ் மக்களுடைய கடைகளையும் ப10ட்டிவிட்டு வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்று மாலையளவிலே மட்டக்களப்பு நகரம் சனசந்தடியற்று அமைதியடைந்தது. தற்பொழுது இங்கு மயான அமைதி ஒன்று நிலவி வருகின்றது.

எனினும் நாளை விடிந்தால் என்ன நடக்கமோ என இரு இனமக்களும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.


மீனகன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..