|
நாகர்கோவிலில் கடற்புலிகளின் சிறப்புக் கனரக ஆயுத அணியினரால் காவலரண்கள் தாக்கியழிப்பு |
|
|
|
Thursday, 05 June 2008 |
|
வடமராட்சி நாகர்கோவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் மீது கடற்புலிகளின் கனரகஆயுத அணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவிக்கையில்.
வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் 3 காவலரண்கள் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 காவலரண்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதலில் படையினருக்கு பலத்த உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|