|
பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள்! |
|
|
|
Thursday, 05 June 2008 |
|
மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதிகளில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ் வேளையில் நேற்றையதினம் மாலை 6 மணியளவில் ஆரையம்பதியிலுள்ள பிள்ளையான் குழுவினரின் அலுவலகத்திலிருந்து சுமார் 35 மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிள்ளையான் குழு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு அருணகிரி வீதியிலும், கல்லடிப்பிரதேசத்திலும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பிள்ளையான் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ரி56 ரக துப்பாக்கியால் இவ் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்றும் . ஒருவர் 21 வயதுடைய இளைஞர் என்றும் மற்றவர் 41 வயதுடைய குடும்பஸ்தர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீனகன்
|