|
முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை வழிநடத்தும் பிள்ளையான் குழு முக்கியஸ்தர் கலிங்கன்! |
|
|
|
Friday, 06 June 2008 |
|
இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காகவும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும் வந்த முஸ்லிம் மக்கள் பிள்ளையான் குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணம் செய்த இரண்டு டொல்பின் ரக நீல நிற வான்கள் பிள்ளையான் குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் காப்பாற்றப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் காத்தான்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் பயணம் செய்த இந்த வாகனங்கள் ஹிஸ்புல்லாவின் மாமியாருக்குச் சொந்தமானது என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. பிள்ளையான் குழுவினரால் நடத்தப்படும் இந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதலுக்கு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள பிள்ளையான் குழு அலுவலக முக்கியஸ்தரான கலிங்கன் என்பவரே பிள்ளையானின் வழிநடத்தலுக்கமைய செயற்பட்டு வருவதாக பிள்ளையான் குழுவினரின் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு நாம் விரைவில் தருகின்றோம்.
மீனகன்
|