பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மொறட்டுவ குண்டுத்தாக்குதல் எதிரொலி: பிரித்தானியா பயண எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 07 June 2008

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான பயணங்களை பிரித்தானியா குடிமக்கள் தவிர்ப்பதுடன், இராணுவ முகாம்கள், அரச அலுவலகங்கள், துணை இராணுவக் குழுக்களின் அலுவலகங்களுக்கு அருகாமை ஊடாக செல்வதனையும் தவிர்த்தல் வேண்டும்.

தற்போதைய தாக்குதல்களில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் போக்குவரத்துக்களும் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இந்த வருடம் நடைபெற்ற தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே வெளிநாட்டு குடிமக்களும் பாதிப்படையும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..