|
வவுனியாவில் படையினரின் மும்முனை நகர்வுகள் முறியடிப்பு |
|
|
|
Saturday, 07 June 2008 |
|
வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
வவுனியாவின் வடமேற்கில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தினர்.
இம் முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இன்று மாலை 5:00 மணிக்கு படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இதில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|