பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

யாழில் முப்படையும் இணைந்து போர்பயிற்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 09 June 2008

யாழ் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையும், தரைப்படை, வான்படையினர்

ஆகிய முப்படைகளும் இணைந்து தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் பாரிய போர் ஒத்திகையையும் மேற்கொண்டுவருகின்றனர்.

அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலி வலயப் பகுதியிலேயே படையினரின் போர் ஒத்திகை இடம்பெற்று வருவதாகவும் இவை அனைத்தும் மற்றுமொரு பாரி படைநடவடிக்கைக்கு தயாராகிவருவதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலாலி தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் வடமராட்சி கிழக்கு வடக்கு மற்றும் யாழ் ஏரிப் பகுதிகளுக்கு மேலாக காலை முதல் மாலைவரை முழுநேரக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை குறிப்பிட்ட கடல் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினரின் யுத்தக் கப்பல்கள் ரோந்து நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணம் இடைக்காடு தொண்டமானாறு போன்ற பகுதிகளிலிருந்து ஆட்லெறி மற்றும் மோட்டார் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.

காதைக் கிழிக்கும் இரைச்சலுடனான ஆட்டிலறி மற்றும் இயந்திரத்துப்பாக்கிச் சத்தங்களால் குடாநாடாடே அதிர்ந்துகொண்டிருந்த அதேவேளையில் முப்படையினரும் இணைந்து கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டுவரும் போர் ஒத்திகை நடவடிக்கை காரணமாக குடாநாட்டில் பெரும் பதற்ற நிலைமை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்கின்றது.

குடாநாட்டிலிருந்து மற்றொரு பாரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான பயிற்சியாகவே இந்த யுத்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..