|
இலங்கையின் இனப்பிரச்சினை இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் |
|
|
|
Thursday, 12 June 2008 |
|
இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இலங்கையிற் பிரச்சினை தீவிரமடையும் போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார். எனவே இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகியுள்ளது என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா அயல்நாடுகளான பாகிஸ்தான்; பங்களாதேஸ்; நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன உறவுகளைப் பேணி வருகிறது. எனினும் இதன் போது தமது தேசியத்துவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா அவதானமாக இருந்து வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதேவேளை அயல்நாடுகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது. ஏனெனில் குறித்த நாடுகளின் பிரச்சினை இறுதியில் இந்தியாவின் பிரச்சினையாக மாறிவிடுவதாக இந்தியப் பிரதமமந்திரி சுட்டிக்காட்டினார்.
நெருடல் இணையம்
|