|
மட்டக்களப்பில் பெருமளவு சிறார்கள் கூலித்தொழிலில் ஈடுபடும் அவலம் |
|
|
|
Thursday, 12 June 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறார்கள் பாடசாலைக்கு சென்று கல்வி பெறாமல் கூலித் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது
இம்மாவட்டத்தில் சகல தமிழ் முஸ்லீம் பிரதேசங்களிலும் இந்த நிலமை காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏறாவூர் நகரில் மாத்திரம் பாடசாலைகளில் படிக்கவேண்டிய 250 சிறுவர்கள் வெவ்வேறு இடங்களில் கூலித் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முழு நாட்டிலும் 15 வயதிற்குட்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட சிறார்கள் கடைகள் தங்ககங்களில் பணிபுரிவதாகவும் இதில் 70 வீதமான சிறார்கள் வீட்டு வேலைகளுக்கே அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டட நிர்மானம், ஆடைத்தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பவற்றிலும் இவர்கள் பணி புரிகின்றனர். வேலை செய்யும் 66சதவீத ஆண் பிள்ளைகளும் 34 சதவீத பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதில்லை. சில சிறார்கள் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதாகவும் தெரிய வருகின்றது.
நெருடல் இணையம்
|