|
தேவன்பிட்டி குடியிருப்புக்கள் மீது உலங்கு வானூர்தி தாக்குதல் |
|
|
|
Thursday, 12 June 2008 |
|
மன்னார் தேவன்பிட்டி கடற்கரையை அண்மித்த மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து நேற்று காலை சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகள் தாக்குதலை நடத்தின.
இதனால் தேவன்பிட்டி மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதலை நடத்தியதால் தொழிலுக்குச் சென்றவர்கள் தமது தொழில் உபகரணங்களை விட்டு கரை சேர்ந்தனர். மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடியதால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல்களினால் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நெருடல் இணையம்
|