பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கடத்தல்கள், காணமல் போதல்களுக்கு அரசே பொறுப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 June 2008

சிறீலங்காவில் இடம்பெறும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பெண்கள், மனிதநேய பணியாளர்கள் உட்பட, 22 கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும், மே மாதத்தில் மட்டும் 18 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டவர்களின் பெண்களும், மனிதநேய பணியாளர்களும் உள்ளடங்குவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை அதிக கவனம் செலுத்துவதாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பல கடத்தல்கள் இடம்பெறுகின்ற போதிலும், பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக, அவை அனைத்தும் உரியவர்களால் முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும், ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது. கடத்தல்களை தடுப்பதற்கு அரசினால் சிறயளவு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது போதுமானது அல்ல எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்த அறிக்கை கூறுகின்றது. இவை தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களை விசாரணை செய்வதற்கும், உண்மையை கண்டறிவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணிக்கும் செயற்குழு சிறீலங்கா செல்ல அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..