|
வடக்கு நோக்கிய யுத்தத்தில் இறுதி இலக்கை அடைய இன்னும் 21 கிலோ மீற்றர்கள் உள்ளன - சரத்பொன்சேகா |
|
|
|
Thursday, 12 June 2008 |
|
சிறீலங்காப் படையினர் கிழக்கை மீட்டது போல் வடக்கையும் மீட்பர் என சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங்கள நாளேடான தினமின செய்தி நாளேட்டுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவை மீட்பதற்கு பல முனைகளில் சிறீலங்காப் படையினரின் 56,57,58,59 வது படைப்பிரிவுகளும் அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். படையினர் தமது இறுதி இலக்கை எட்ட இன்றும 21 கிலோ மீற்றர்கள் இருக்கின்றன. இதுவரை விடுதலைப் புலிகளின் ஒன்று தொடக்கம் நான்கு முகாங்களை படையினர் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்குகுழியில் பதுங்கியிருக்கிறார். சிறீலங்காப் படையினர் பல நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களைக் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்போம். கிழக்கை கைப்பற்றியது போன்று வடக்கையும் சிறீலங்காப் படையினர் வெற்றிகரமாக மீட்பர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|