|
மே மாதம் 68 பொதுமக்கள் படுகொலை - 44 பேர் கடத்தல் |
|
|
|
Friday, 13 June 2008 |
|
இவ்வருடம் மே மாதத்தில் தமிழர் தாயகத்தில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டு்ளதாகவும், 44 பேர் காணாமல் போயிருப்பதாகவும், தமிழீழ சமாதான செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியிலேயே அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறீலங்கா படையினரது ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொள்ளும் கிளைமோர் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களில் இந்த மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடங்குகின்றனர்.
யாழ் குடாநாட்டில் மண்டைதீவுக்கு அருகிலுள்ள சிறுதீவில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் படையினர் மேற்கொண்ட எறிகணையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த விபரமும் விடுதலைப் புலிகளின் அறிக்கையிள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|