|
சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் 10.05.2008 அன்று ஏ-520 துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவினைச் சேர்ந்த கடற் கரும்புலி லெப். கேணல் செம்பியவழவன் என்ற மாவீரரின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் விநாயகம் ஆற்றிய உரையில் கூறியதாவது:
திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற ஏ-520 துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டவர் கங்கைய அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி லெப். கேணல் செம்பியவழவன்.
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகளால் துருப்புக்காவி கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று நாம் கூறியிருந்தோம்.
இன்றும் தமது எத்தனை கப்பல்கள் வெடிக்குமோ என்ற அச்சத்துடன் தான் சிறிலங்கா கடற்படை குழம்பிப் போய் உள்ளது.
இக்கப்பலை உடைத்து எறிந்தது போன்று சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள். உடைத்து வீர வரலாற்றை நிலை நாட்டுவார்கள் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|