பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் கிளிநொச்சி ஆசிரியர்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 17 June 2008

கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி தமிழ் மகாவித்தியலாயத்தைச் சேர்ந்த வி.கவிதா, எஸ்.கவிதா, வி.முரளிதரன், கே.இரத்தினபாலன் ஆகிய நான்கு ஆசிரியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் கடந்த ஒன்றரை வருடங்களாக மகரகமவில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தங்கியிருந்து கற்கை நெறிகளுக்கு சமூகமளித்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நால்வரும் மகரகமவில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தங்கியிருந்து கற்கை நெறிகளுக்கு சமூகமளித்தமைக்கான அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய போதும் அவற்றை ஏற்க மறுத்த மருதானை காவல்துறையினர் இவர்கள் நால்வரையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவர்களின் கைது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..