|
வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் மீது தாக்குதல் |
|
|
|
Monday, 16 June 2008 |
|
யாழ். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்த 33-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன.
வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த தூண்டில் படகுகளையே டோறாப் படகுகள் நேற்று முன்நாள் காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை துரத்தி தாக்குதலை நடத்தியுள்ளன.
அதேநேரம் டோறாப் பீரங்கி கலங்கள் கடலில் தரித்து நிற்க சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட நாகர்கோவில் களமுனையில் உள்ள படையினர் கரையை நோக்கி வந்த மீன்பிடிப் படகுகள் மீது சரமாரியான எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
இதனால் தமது படகுகளை கைவிட்டு விட்டு கடல் தொழிலாளர்கள் பாதுகாப்பு தேடிக்கொண்டனர்.
இத்தாக்குதல்களால் 25-க்கும் அதிகமானவர்கள் தூண்டில் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 20,000 ரூபாவுக்கும் மேற்பட்ட பொருள் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|