பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்- 3 உடலங்களும் படைப்பொரு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 21 June 2008

வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர்.

இதில் படையினர் இருமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் காலை 7:00 மணியளவில் முறியடிக்கப்பட்டன.

ஒருமுனையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்புத் தாக்குதல் இன்று பிற்பகல் 3:45 மணிவரை நீடித்தது.

இம்முனையும் பின்னர் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் 18 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 31 படையினர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் 3 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடுமையாக சிதைந்துள்ளன.

ரி56-2 ரக துப்பாக்கிகள் - 03

பைகள் - 03

தண்ணீர் கொள்கலன்கள் - 06

ரவைக்கூடுதாங்கி அணிகள் - 03

ரவைக்கூடுகள் - 08

மற்றும் ரவைகள் கைக்குண்டுகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..