|
பொதுமன்னிப்பு காலத்தில் மீளத்திரும்பாத 12 ஆயிரம் பேரை கைதுசெய்ய நடவடிக்கை |
|
|
|
Saturday, 21 June 2008 |
|
பொதுமன்னிப்பு காலத்தில் பணிகளுக்கு திரும்பாத சுமார் 12 ஆயிரம் இராணுவத்தினரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த மேமாதம் 2 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 23 படையில் இருந்து தப்பிசென்றவர்களுக்கு மீளத்திரும்ப கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் உரிய பலன் கிடைக்கவில்லை என இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டார். 2003 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் பேர் இராணுவத்தில் தப்பிச்சென்றதாக மதிப்பிடப்பட்டிருந்தது
நெருடல் இணையம்
|