|
இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவினதும் பாகிஸ்தானினதும் நட்பை இலங்கை பெற்றுவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆயுத உடன்படிக்கையானது, “தற்பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்குழுவினர், இது தொடர்பான பேச்சுக்களையே இலங்கை அதிகாரிகளுடன் நடத்தியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறி;ப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தலைமையிலான உயர்குழுவினர் இலங்கைக்கு இராணுவ மற்றும் புலனாய்வு அடிப்படையிலான உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியா, தமிழ்நாட்டின் உணர்வுகளைத் தூண்டாத வண்ணம், தற்பாதுகாப்பு என்ற அடிப்படையில் 40 மில்லிமீற்றர் ரக எல் 70 வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் குறைந்த மட்டத்தில் பறக்கும் ஊர்திகளைக் கண்காணிக்கும் ரடார் என்பவற்றை இலங்கைக்கு விநியோகம் செய்துள்ளது.
இலங்கை ஏற்கனவே சீனாவிடம் இருந்து 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளுக்குப் பின்னர், ஜியான் - 7 சண்டை வானூர்திகள்,ஜே வை-11 3 டி வான்பரப்பைக் கண்காணிக்கும் ராடர்கள், இயந்திரத் துப்பாக்கிகள்,ஏ கே 47 துப்பாக்கிகள்,வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்திருக்கிறது.
நெருடல் இணையம்
|