பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow சார்க் மாநாட்டின்போது கொழும்பு கடற்பரப்பில் 3 இந்திய யுத்தகப்பல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சார்க் மாநாட்டின்போது கொழும்பு கடற்பரப்பில் 3 இந்திய யுத்தகப்பல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 June 2008

சார்க் உச்சி மாநாட்டின் பொழுது, கொழும்பு கடற்பரப்பில் மூன்று யுத்த கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு, இந்தியா திட்டமிட்டுள்ளது.

வரும் ஓகஸ்ட் மாதம், கொழும்பில் சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் வேளையில், கட்டுநாயக்கா பன்னாட்டு விமானம் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உட்பட பாரதத்தின் இராசதந்திரிகளை, பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, கொழும்பு கடலில் மூன்று யுத்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று, இந்திய தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன், மூன்று யுத்தக் கப்பல்களின் வானூர்தி இறங்கு தளங்களில், தாக்குதல் உலங்குவானூர்திகள் தரித்து நிற்கும் என்றும், இந்திய தூதரக வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..