பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வவுனியாவில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 19 பேர் படுகாயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வவுனியாவில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 19 பேர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 01 July 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

பாலமோட்டைப் பகுதியை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

முன்நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக இரவு 8:00 மணியளவில் விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர்.

இரவு 10:00 மணிவரை தொடர்ந்த தீவிர தாக்குதலில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

படையினர் அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..