|
வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள “பாஸ்” அனுமதி முறை கொழும்பிலும் அமுலாகிறது |
|
|
|
Saturday, 12 July 2008 |
|
எதிர்வரும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் கருதி கொழும்பி;ன் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விசேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாஸ் முறை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த “பாஸ்”அனுமதி முறை இன்று முதல் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை காவல்துறை நிலையங்களின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளன.
இதன்படி இந்த பாஸை வைத்திருப்பவர்கள் மாத்திரமே கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வாகனங்களில் குறித்த பாஸை வைத்திருப்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|