|
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு - 3 இராணுவத்தினர் ப |
|
|
|
Monday, 14 July 2008 |
|
வவுனியா பாலமோட்டை; குஞ்சுக்குளம் ஆகிய இருமுனைகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
படையினரின் பின்தளங்களில் இருந்து பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டன.
இம் முறியடிப்பில் படைத்தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|