|
கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள்: குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் கொட்டும் மழையிலும், ம |
|
|
|
Tuesday, 15 July 2008 |
|
சிறீலங்கா படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகள் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மன்னாரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள படையினர், அந்த மாவட்டத்தின் எல்லையாகவுள்ள முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை நோக்கித் தொடாச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதனால் கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள் மரங்களின் கீழ் தங்கியுள்ளனர்.
நேற்றுப் பெய்த கடுமையான, மழையின் மத்தியிலும் பல்வேறு சிரமங்களுடன் இந்த மக்கள் மரங்களின் கீழேயே தங்கியுள்ளனர்.
நெருடல் இணையம்
|