|
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவ தென்னாபிரிக்கா தயார் |
|
|
|
Tuesday, 15 July 2008 |
|
இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவியளிக்கத் தயார் என தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் சர்வதேச சமாதான நடவடிக்கையாளரும், பிரதி அமைச்சருமான ராதாகிருஸ்ண படையாச்சி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த அமைச்சர் பி சந்திரசேகரனிடம் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்காக அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சாதகமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என படையாச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா பல தடவைகளாக இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வில் தலையிட்டது. எனினும் இன்று கபடமான முறையற்ற பார்வையாளர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. இந்தநிலையில் இந்தியா, குறித்த முறையற்றவர்களுடன் சேர்ந்து விடாது, தீர்க்கமான முறையில் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வித்திடவேண்டும் எனப் படையாட்சி கோரியுள்ளார்.
நெருடல் இணையம்
|