|
தமது அணியினரைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் |
|
|
|
Saturday, 26 July 2008 |
|
தமது அணியில் உள்ள சுமார் ஆயிரம் உறுப்பினர்களை அரசாங்கத்தின் காவல்துறையிலும் படையிலும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் தமது கட்சி பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்ப்பார்ப்பதாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
சுமார் ஆயிரத்து ஐநூறு என்ற எண்ணிக்கையிலான தமது உறுப்பினர்களைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது உறுப்பினர்களை முதலில் கிராம மட்ட சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குள் இணைத்துப் பின்னர் காவல்துறையிலும் படையிலும் இணைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|