|
யால வன சரணாலயப் பகுதியில் தப்பியோடிய 6 படையினர் கைது |
|
|
|
Monday, 28 July 2008 |
|
யால வன சரணாலயப் பகுதியில் சிறீலங்கர் படையினர் 6 பேரை வன பரிபாலன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 சிறீலங்காப் படையினரும் படையில் இருந்து தப்பியோடிவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏனைய சுடுகலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தல கதிர்காமப் பகுதியில் விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் அப்பகுதிகளுக்கு சிறீலங்காப் படையினரின் பிரசன்னம் இருக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|