|
பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: ஐந்து படையினர் பலி- ஏழு பேர் படுகாயம் |
|
|
|
Sunday, 27 July 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று திங்கட்கிழமை மாலை 3:35 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களிலிருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை மாலை 4:45 மணிவரை நடத்தி படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.
இதில், ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|