|
ஆழ ஊடுருவும் படை உறுப்பினரின் சடலம் கையளிக்கப்பட்டது - கொல்லப்பட்டவர் புலிகளின் சீருடையினை அணிந்திரு |
|
|
|
Monday, 28 July 2008 |
|
இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் இன்று பி எப் - எல் ரீ ரீ ஈ எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் படை மீட்டுள்ளது.
இதனையடுத்து அந்தச் சடலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இன்று கையளித்தனர்.
இவர் அண்மையில் கொக்காவிலில் வைத்து பூநகரி செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சாந்தலிங்கம் விமலகுமார் கிளைமோர் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமையை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.
இவர் மக்கள் படையினால் கொல்லப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை அண்மையில் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட 30 உடலங்களில் 4 உடலங்களை அடையாளம் காண முடியவில்லை எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலர் பாவரசன் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|