|
யாழ். காங்கேசன்துறையில் கப்பலில் இறக்கும் உணவுப் பொருட்கள் படையினரால் சூறையாடப்படுகின்றன. |
|
|
|
Monday, 28 July 2008 |
|
கப்பல் மூலம் யாழ் குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள், காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்துப் படையினரால் சூறையாடப்பட்டு வருகின்றன.
"பால", "றுகுணு", "வின்ரன்" போன்ற கப்பல்களில் யாழ் குடாநாட்டிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு அனுப்பப்பட்ட கப்பல்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்டும் உணவுப் பொருட்கள், படையினரால் சூறையாடப்படுகின்றன.
இதனை விட, உணவுக் கப்பல்களில் இலங்கைப் படையினருக்கான சீருடைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
நெருடல் இணையம்
|