|
வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:40 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வினை முறியடிக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது. இழப்புக்களுடன் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.
இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளால் படையினரின் படைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோதல் இடம்பெற்ற நடுநிலைப் பகுதிகளில் படையினரின் உடலங்கள் கிடக்கக் காணப்படுகின்றன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
|