|
ஓட்டமாவடியில் 13 குடிசைகள் ஒட்டுக்குழுக்களினால் தீவைத்து எரிப்பு |
|
|
|
Saturday, 02 August 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒட்டமாவடி மாஞ்சோலை தமிழ்-முஸ்லிம் எல்லைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான 13 குடிசைகள் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு 8.30மணியளவில் இந்த கிராமத்துக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் இந்த தீவைப்பு செயலை புரிந்ததாக அப்பகுதி தகவல்கள் முரசுக்கு தெரிவித்தன.
இந்த பகுதியில் இருந்த மக்கள் கடந்த காலங்களில் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் காரணமா இரவு வேளைகளில் ஓட்டமாவடி பிரதேசங்களில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளின் தங்கிவருவதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவைப்பு காரணமாக 13 குடும்பங்களின் சொத்துகள் முற்றாக அழிந்துபோயுள்ளதாகவும் இதன் காரணமாக பல இலட்சம் ரூபா நஸ்டம் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நெருடல் இணையம்
|