|
நீர்கொழும்பில் 61 தமிழர்கள் கைது |
|
|
|
Sunday, 03 August 2008 |
|
நீர்கொழும்பில் நேற்று முன்தினம் நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 61 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு நகரம் உட்பட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்பின் முத்துமாரியம்மன் வீதி அரசப்பா வீதி, தலுப்பத்தே பல்லேசேன வீதி ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வடக்குகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்படி, பல வருடங்களாக நீர்கொழும்பில் வசித்தவர்களும் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|