|
தென்மராட்சியில் கைக்குண்டு வெடித்து 3 இராணுவத்தினர் பலி; இருவர் காயம் |
|
|
|
Monday, 04 August 2008 |
|
தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைக்குண்டொன்று வெடித்ததில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தனங்கிளப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கைக்குண்டொன்று தவறுதலாக வெடித்த போதே அங்கு கடமையிலிருந்த மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், இரு படையினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம், இராணுவத்தினரும் இராணுவ பொலிஸாரும் தனித்தனி விசாரணைகளை நடத்தி வருவதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த மூன்று படையினரது உடல்களும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|