|
புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் பலி |
|
|
|
Tuesday, 05 August 2008 |
|
மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வுத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அப்பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி கொமாண்டோக்கள் ஆறு பேர் தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டபோது விடுதலைப் புலிகளின் உள்ளக பாதுகாப்பு அணியினர் இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
மற்றைய உடலத்தை தப்பிய நான்கு படையினர் இழுத்துச்சென்றனர்.
தப்பிய படையினரை சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மீட்டுக்கொண்டு சென்றது என்றும் அந்த தளம் தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|