பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow விடுதலைப்புலிகள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் 23 படையினர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விடுதலைப்புலிகள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் 23 படையினர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

மட்டக்களப்பு குடும்பிமலை பெரியவட்டுவான் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணம் செய்த உழவுஇயந்திரத்தை இலக்குவைத்து நேற்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளேமோர் தாக்குதலில் காயமடைந்த படையினர் மட்டக்களப்பு வெலிக்கந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இத் தாக்குதலின் பின்னர் அப்பகுதியில் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலானது இவ்வாண்டிலே மேற்கொள்ளப்பட்ட பாரிய கிளேமோர் தாக்குதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதல் தொடர்பான படையினருக்கு பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டபோதும் படைத்தரப்பிலிருந்து ஒருவர் இறந்ததாகவும் மூவர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தகவலை மறைத்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..