|
மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர்.
இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:
ஆர்.பி.ஜிக்கள் - 02
ஏ.கே.எல்.எம்.ஜி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 04
ஆர்.பி.ஜி எறிகணைகள் - 07
ஆர்.பி.ஜி புறப்பலர்கள் - 07
தலைக்கவசங்கள் - 03
ரவைத்தடுப்பு அணிகள் - 03
ஜக்கற் ரவைக்கூடுதாங்கிகள் - 07
ஏ.கே ரவைக்கூடுகள் - 19
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|