பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஒருவர் பலி - இரு படையினர் காயம
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஒருவர் பலி - இரு படையினர் காயம அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 August 2008

அம்பறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையில் - விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி - விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் முயற்சியில் அங்கு நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த மாதம் இவ்வகையான தேடுதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா விசேட அதிரடிப்படையை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை, அம்பறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் கடந்த மாதம் முகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தி அவர்களை கலைத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..