|
கடந்த 8ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலை, அரசாங்க அதிபர் இல்லம் ஆகியவற்றினை இலக்கு வைத்து மணலாறு முன்னரங்கு நிலையிலிருந்து ஏவப்பட்ட எறிகணை வீச்சில் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர்...
திருமதி.இமெல்டா சுகுமார் கையில் மட்டும் காயமடைந்து உயிர்தப்பினார்.
எனினும் இத்தாக்குதலில் ஒன்றரை வயதான குழந்தை உடல் சிதறிப் பலியானது. 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வைத்தியசாலைக் கட்டிடம், பல வீடுகள், பொதுக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் கால்நடைகள் பலியாகின.
எனினும் அரசாங்க அதிபர் உயிர் தப்பியதை அறிந்து கொண்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இத்தாக்குதலை தாம் நடாத்தவில்லையென வழமைபோல் தெரிவித்துக் கொண்டார்.
எனினும் நேற்று வன்னிக் கட்டளைத் தளபதியைச் சந்தித்த வன்னிப்பகுதிக்கான நான்கு அரசாங்க அதிபர்களின் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த மேஜர். ஜென்ரல். ஜெகத் ஜெயசூரிய இத்தாக்குதலைத் தமது படையினரே மேற்கொண்டதாகவும்,
அதேபோன்று வன்னிப்பகுதியில் நடக்கும் கிளைமோர்த் தாக்குதல்களையும் தாமே மேற்கொள்வதாகவும் ஒப்புக்கொண்டார்.
எனினும் யுத்தம் நடக்கும் ஒரு பிரதேசத்தில் தம்மிடம் பாதுகாப்பு உத்தரவாதத்தை எதிர்பார்க்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதன்மூலம் இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவின் பொய்ப் பிரச்சாரத்துக்கு வன்னித் தளபதி ஆப்பு வைத்துள்ளார்.
நெருடல் இணையம்
|